கோவை அருகே விபத்து: 4 நண்பர்கள் பலி
கோவை: கோவை பேரூர் அருகே நடந்த சாலை விபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற நான்கு நண்பர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிப்பாளையம் அருகே சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நொறுங்கியது. விபத்தின் தாக்கத்தில் கார் முழுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பிரபாகரன் (19) கடுமையாக காயமடைந்து…
