Home » Tamilnadu » Page 5
printing counterfeit notes

யூ-டியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது!

யூ-டியூப் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டு அச்சடித்ததாக 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போலீசார் கைது செய்துள்ளனர். முத்துகடையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற கணவன்-மனைவி கொடுத்த பணத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. வங்கி ஊழியர்கள் இதை சந்தேகித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த லாரியை வாங்கிய ராமு மற்றும் அஸ்கர் என்பவர்களிடமிருந்து அந்த பணத்தை பெற்றதாக…

முழுமையாகக் காண
Aadhar Card New Rules

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு புதிய ரூல்ஸ் – UIDAI முக்கிய அறிவிப்பு!

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய மாற்றம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இனி பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை திருத்த ஆதார் மையத்துக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக மாற்றம் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு அறிமுகமான ஆதார் திட்டம் தற்போது வங்கி, பாஸ்போர்ட், நலத்திட்டங்கள், மொபைல் சிம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆதார் தகவல்களின் துல்லியம் மிக முக்கியமானதாகிறது. UIDAI…

முழுமையாகக் காண
Bus-accident

கும்பகோணத்தில் பேருந்து விபத்து – படியில் நின்ற மாணவர் பலி!

கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி பகுதியில் நடந்த துயரச்சம்பவம் ஒன்று உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையிலிருந்து வந்த தனியார் பேருந்து கோவிலாச்சேரி நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்தது. அந்த நேரத்தில், அதே பாதையில் வந்த அரசுப் பேருந்து வேகமாக முந்திச் செல்ல முயன்றது. முந்தும் போது அரசுப் பேருந்தின் பின்பகுதி, நிறுத்தத்தில் இருந்த தனியார் பேருந்தின் முன்பகுதியுடன் உரசியது. அந்த நேரத்தில் தனியார் பேருந்தின் பின்பக்கப் படியில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர் இளம்பரிதி, உராய்வின் தாக்கத்தில்…

முழுமையாகக் காண
ஓய்வு பெற்ற அதிகாரியிடம் மோசடி

ஓய்வு பெற்ற அதிகாரியிடம் மோசடி – ‘டிஜிட்டல் கைது’ கும்பல் சிக்கியது!

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் “உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று மிரட்டி, 29.45 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் மூவர் கோவையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் (61) கோவை மசக்காளிபாளையத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவரின் மொபைல் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு செய்து, “உங்கள் வங்கிக் கணக்கில் மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளது, எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று…

முழுமையாகக் காண
கவிஞர் சினேகனின் தந்தை

சோகத்தில் சினேகன் – 101 வயதில் தந்தை உயிரிழப்பு!

தமிழ் திரைப்பட உலகில் பாடலாசிரியராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவராகவும் விளங்கும் கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) இன்று அதிகாலை காலமானார். சமூக வலைதளத்தில் தனது தந்தையின் மறைவை உறுதிப்படுத்திய சினேகன், “என் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு இயற்கை எய்தினார்” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்துள்ளார். “புத்தம் புது பூவே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன், இதுவரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி ரசிகர்களின்…

முழுமையாகக் காண
Cyclone Montha

மொந்தா புயல் நெருங்குகிறது – சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்குக் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொந்தா புயல் தற்போது வங்கக்கடலின் மேற்குப் பகுதியில் நிலவுகிறது. நாளை காலை ஆந்திரா மாநிலம் மச்சிலிபட்டணம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல்…

முழுமையாகக் காண
TVK leader Vijay meets families of Karur

நான் உங்களோடு இருக்கேன் – கண்ணீருடன் நின்ற விஜய்!

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 37 குடும்பங்களை சேர்ந்த 235 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாக சென்று, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய விஜய், அவர்களின் குடும்பத்தினரை ஆற்றுப்படுத்தினார். விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தொழில், சொந்த வீடு, கடன் பிரச்சனை, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட விவரங்களை எழுத்துப்பூர்வமாக பெற்று…

முழுமையாகக் காண
Rain and floods in Chennai today

சென்னையில் இன்று மழை வெள்ளம்! வானிலை மையம் எச்சரிக்கை

அக்டோபர் 26: தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தற்போது போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிமீ தொலைவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

முழுமையாகக் காண
price of gold

தங்கம் விலை கீழே போகுமா? நிபுணர்கள் அதிரடி கணிப்பு!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வேகமாக உயர்ந்து வந்த நிலையில் தற்போது சற்று மந்தமடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனை நடைபெற்று வருகிறது. அக்டோபர் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம், அக்டோபர் 24 அன்று ரூ.91,200 ஆக சரிந்தது. ஆனால் மறுநாள் மீண்டும் ரூ.92,000 ஆக உயர்ந்தது. சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளால் தங்கம் விலை மாறுபடுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். சென்னை தங்கம் வியாபாரிகள் சங்கத்…

முழுமையாகக் காண
cyclone-in-odisha

மொந்தா புயல்: ஆந்திரா–ஒடிசா இடையே கரையை கடக்கவுள்ளது!

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ‘மொந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மொந்தா புயல் அந்தமானுக்கு தென்மேற்கே 440 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 970 கி.மீ., ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 1040 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து…

முழுமையாகக் காண