கரூர் உயிரிழப்பில் ஒருவரை மட்டும் குறை கூற முடியாது என அஜித் கருத்து
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, இந்நிலையில் ஒரே ஒருவரை குறை கூறுவது தவறு என நடிகர் அஜித்குமார் தெரிவித்தார். தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜயின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “நம் அனைவருக்கும் பங்கு உண்டு” என குறிப்பிட்டார். கூட்டத்தை அதிகரிப்பதையே பெருமை என பார்க்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கிரிக்கெட் போட்டிகளில் கூட்டம் கூடும் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் வருவதில்லை என எடுத்துக்கூறிய அவர்,…
