டெல்லி கார் வெடிப்பில் காயமடைந்தவர்களை சந்தித்த பிரதமர்!
டெல்லியில் நடந்த கொடூரமான கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பூடான் பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர், விமான நிலையத்திலிருந்து நேராக எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெறும் காயமடைந்தவர்களுடன் உரையாடி அவர்களை ஆறுதல் கூறினார். மருத்துவர்கள் வழங்கிய தகவல்களை பிரதமர் விரிவாக கேட்டறிந்து, சிறந்த சிகிச்சை வசதிகளை உடனே ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில், இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான…
