17 குழந்தைகளைப் பிடித்த இயக்குநர்! என்கவுன்டரில் சுட்டுக்கொலை
மும்பையில் உள்ள படப்பிடிப்பு ஸ்டுடியோவில் 17 சிறுவர் சிறுமிகளை பிணக்கைதிகளாக வைத்து மிரட்டிய வெப் சீரிஸ் இயக்குநர் ரோகித் ஆர்யா (50) போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆடிஷன் என்ற பெயரில் குழந்தைகளை அழைத்துச் சென்ற ரோகித் ஆர்யா, ஆர்.ஏ. ஸ்டுடியோவில் அவர்களை அடைத்து வைத்து விடியோவில் தாம் தீவிரவாதி அல்ல என்றும், பணம் நோக்கம் கிடையாது என்றும் கூறினார். சிலருடன் பேச வேண்டும், கோரிக்கை ஏற்காவிட்டால் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பேன் என மிரட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….
