காவலர் குடியிருப்பில் கொடூரம் – இளைஞர் வெட்டிக்கொலை!
திருச்சியில் காவலர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் முகவராக பணியாற்றி வந்த தாமரைச் செல்வன் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலின்படி, தாமரைச் செல்வனுக்கும் எசனக்கோரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கமிஷன் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தாமரைச் செல்வன், சதீஷை அடித்து அவமானப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாமரைச் செல்வன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரை…
