ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியூவில் அனுமதி – உடல்நிலை கவலைக்கிடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட கடுமையான காயத்தால், இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தை டைவ் அடித்து பிடிக்க முயன்றபோது, தரையில் கடுமையாக மோதியதில் அவரது விலா எலும்புப் பகுதியில் பலத்த அடிபட்டது….
