டெல்லியில் நடந்த கொடூரமான கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பூடான் பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர், விமான நிலையத்திலிருந்து நேராக எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெறும் காயமடைந்தவர்களுடன் உரையாடி அவர்களை ஆறுதல் கூறினார்.
மருத்துவர்கள் வழங்கிய தகவல்களை பிரதமர் விரிவாக கேட்டறிந்து, சிறந்த சிகிச்சை வசதிகளை உடனே ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகி, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த திடீர் மருத்துவமனைப் பயணம், அரசாங்கம் காயமடைந்தவர்களின் நலனில் தீவிர அக்கறை காட்டுவதை வெளிப்படுத்துகிறது.
